Candy : Hi all…… am back….
(பீட்டர் மச்சான் )
சக்தி : ஏய் கேண்டி நீ பேக்குதான் எங்களுக்கு தெரியும் வா
............
விமல்: ஏண்டி சீதா உங்க செட்ல
நீ மட்டும் யாரையும் லவ் பண்ணல ?
சீதா : அச்சச்சோ அப்புறம் அவன் கல்யாண
மண்டபத்துக்கு வந்து கலாட்டா பண்ணினா என்ன செய்றது?
..............
.......
Class Teacher: Where r the other girls?
Jene : All r gone mam except me…
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்டியும் ஒரு ப்ரெண்டும் தேவை மச்சான்....
இணைபிரியாமல் இருந்த நண்பர்களிடம்...கலகலப்பான சந்தோஷமான நட்புகாலத்திற்குள் அழைத்து சென்று விட்டது இந்த சாதாரண விளம்பரப் பாடல்.
All my Rehab sweeties
Plzz Share your unforgettable Memories in this blog to make this more fabulous…
**********************
எங்கள் Bpcl - இல் மதிப்பிற்குரிய திரு. கண்ணபிரான் என்றொரு Planning Officer இருக்கிறார். பங்க் ஆரம்பித்த புதிதில் Load எடுப்பதற்கான சில நிர்வாக வழிமுறைகள் பரிட்சயமாகாததால் ஏற்பட்டுவிடும் சில தவறுகளுக்காக இவர் என்னை மிகவும் கடிந்து கொள்வார்.
தொலைபேசியின் மறுமுனையில் அவர்
கோபமாக திட்டிக்கொண்டே இருப்பார். மறுமுனையில் கணக்கு வாத்தியாரிடம் குட்டு வாங்கிய மாணவி போல் நான் கேட்டு கொண்டிருந்துவிட்டு எங்கள் Sales Officer - ஆன திரு. வெங்கடேசன் சார் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்பேன். அவர் சிரித்துவிட்டு "கண்ணபிரான் சார் உங்க பிரெண்ட் ஆச்சே அப்படி எல்லாம் திட்டமாட்டாரே " என்று சமாதானமாக கூறுவார். அதன் பிறகு நேரங்கெட்ட நாட்களில் நான் Load வேண்டும் எனும்போதெல்லாம் " நான் சொல்கிறேன் உங்க பிரெண்ட் இருந்தா நிச்சயம் போடுவார் " என்று கூறுவார் வெங்கட் சார். .
அற்புதமான நண்பர் வெங்கட் சார் அவர்கள்.
பச்சை தங்கமென்ற வர்த்தக கடலில் திசை தெரியாமல் நாங்கள் தவித்து நிற்கையில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சரியான ஆலோசனைகளை வழங்கியது மட்டும் இல்லாமல் இன்று வரை எல்லோருக்கும் தன் வரம்பிற்கு உட்பட்ட உதவிகளை செய்துவரும் இந்த நண்பர் பற்றி எழுத இன்னொரு இடுகை வேண்டும்.
"சுமுகமான சூழலை உருவாக்கி மன இறுக்கங்களை போக்கி விடும் நட்பென்ற சொல்லே அலாதியானது!!!!!!"
விளம்பரத் துறையில் புகைப்பட கலைஞனாக பணியாற்றி வருகிறான் மனோ. வலைதள நண்பர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்ற விமர்சனங்களைக் கடந்து கண்ணியமானதோர் நட்பை இன்றுவரை தொடர்பவன். எந்த பொய்களுமற்று மிக சிறந்ததொரு மரியாதையை எனக்களித்த இந்த
நண்பனை நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் பகிர்ந்து கொள்ளப்படும் கனவுகள், சந்தோஷங்கள், கவலைகள், இன்னும் எத்தனையோ...
கல்கி மற்றும் மு.வ இவர்களின் சமூக நாவல்களை படிக்கும் போதெல்லாம் நான் நினைப்பேன் இவர்களது கதைத் தலைவிகளைப் போல பெண்கள் இன்னும் இருப்பார்களா என்று... நாட்கள் செல்ல செல்ல இவர்களின் கருத்துக்கள் மனதில் பதியப் பதிய அந்த நாயகிகளை என் வாழ்விலேயே சந்தித்தேன். முதலில் என் அம்மா . பின்பு ப்ரீதா ! பல திறமைகளை கொண்டிருந்தும் எந்த ஆர்ப்பாட்டங்களும் இல்லமால் அமைதியான , எளிமையான தனது உதவி தலைமை ஆசிரியர் பணிகளுக்கிடையிலும் தன்னால் முடிந்த கல்வி சேவையை கிராமத்து ஏழை மாணவர்களுக்கு செய்து வரும் இந்த சிநேகிதியிடம் நேரம் போவதே தெரியாமல் பலவற்றை விவாதம் செய்வது எனக்கு மிகப்பிடித்தமான ஒன்றாகும் .
"ஒத்த கருத்துடைய நண்பர்கள் நீண்ட காலம்
இணைபிரியாமல் இருப்பது வாய்க்குமானால்
அது கடவுளின் பரிசு."
திரு. வெங்கட் சார் , மனோ, ப்ரீத்தா இந்த மூவருமே நான் மட்டுமில்லாமல் எத்தன்மையானவரும் சிநேகம் கொள்ள விரும்பும் நம்பிக்கைக்குரியவர்கள். தங்களை சுற்றி மிக சிறந்ததோர் மாற்றங்களை செய்யக்கூடியவர்கள். தங்களது இனிமையான நட்பால் என்றென்றும் நமது எண்ணங்களில் உயிர்ப்புடன் இருப்பவர்கள்.
நான் எதிர்பாராத தருணத்தில் எனக்கு கிடைத்த இந்த மூன்று நண்பர்கள் பற்றி பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த இடுகையை மேலும் மதிப்புற செய்ய விரும்புகிறேன்.
நண்பர்கள் தினத்திற்கான இடுகை. நேரம் இல்லாததால் சற்றே தாமதாமாகிவிட்டது அதனால் என்ன....... நல்ல நண்பர்கள் இருக்கையில் எல்லா நாட்களுமே நண்பர்கள் தினம்தான்.